Monday, 31 August 2020

புரியாதப் புதிராய் இருக்கும் சிதம்பர இரகசியம்

 புரியாதப் புதிராய் இருக்கும் சிதம்பர இரகசியம்

சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் என்ற தலத்தின் பெயரைக் கேட்டால் நம் நினைவிற்கு வருவது சிதம்பர இரகசியம் தான். அது என்ன சிதம்பர இரகசியம்? இன்றளவும் அது தேடல் நிறைந்துள்ளதாகவே இருந்தது. தேடலில் கிட்டிய சில விடயங்களைக் காண்போம்.



படம் 1 : சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்

தமிழ் நாட்டின் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் என்னும் இடத்தில்தான் சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது. சிதம்பரம் தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய நகரமாகும். இக்காலத்தில் இவ்விடத்தைச் சிதம்பரம் என்று அழைக்கப்பட்டாலும் ஆதி காலத்தில் தில்லை என்ற பெயராலே இவ்விடம் அறியப்பட்டுள்ளது. தில்லை மரங்கள் அதிகம் இருந்த ஒரு வனப்பகுதியாக இவ்விடம் இருந்ததால் ஆதியில் தில்லை என்று அழைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் என்ற சொல்லை

சித் + அம்பரம் : சிதம்பரம்

என்று பிரித்துப் பார்க்கலாம். சித் என்றால் அறிவையும் அம்பரம் என்றால் ஆகாயத்தையும் குறிக்கின்றன. இந்த ஆலயத்தில் அருவமாய் ஆகாயமாக நடராஜர் இருப்பதால் இந்தத் தலம் சிதம்பர நடராஜர் என்ற பெயரைக் கொண்டிருக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றனர். தலத்தின் பெயரை அந்நகரத்தின் பெயராகப் பிற்காலத்தில் மறுவியுள்ளது. நால்வர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் தேவாரத்தில் போற்றி பாடிய தலமாகவும் சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் திகழ்கின்றது.

  தில்லைவனம் என்று அழைக்கப்பட்ட தில்லை இன்று சிதம்பரம் என அழைக்கப்படுகின்றது. கி.பி 1300-இல் மாலிக் கபூர் என்ற மன்னரின் படையெடுப்புக்குப் பின் சிதம்பரம் சார்ந்த ஓலைச்சுவடிகள் அழிக்கப்பட்டன. அக்காலத்தில் ஓர் அரசன் படையெடுக்கும் நாடுகளில் அவனது மதமே ஆதிக்கம் செலுத்தியிருக்க வேண்டும் என்ற ஒரு சட்டம் இருந்துள்ளது. இவ்வாறு பல வரலாறுகளை இழந்த தில்லை நாயக்கர்களால் மீட்கப்பட்டு தில்லையின் அறிவியல், மருத்துவ ஏடுகளை இரகசியமாகக் காக்கப்பட்டுள்ளன.

          இந்து சமய வேதங்களின்படி தை மாதம் குரு பூசம் பகல் நேரம், சிவப் பெருமான் தன்னுடைய 3000 பூதகணங்களோடு பூமிக்கு வந்து பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆனந்த தாண்டவமாய் காட்சியளிப்பதற்காகத் தில்லையைத் தெரிவு செய்தார். இந்த ஆலயம் கட்டி முடித்தப் பின் 3000 பூதகணங்களில் ஒருவர் காணவில்லை என்றும் தொலைந்த போன அந்த ஒருவர்தான் நடராஜர் என்று புராணங்கள் கூறுகின்றனர்.

3000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஆலயமாகத் திகழ்ந்தாலும் தொல்லியல் ஆய்வில் கிடைத்த சான்றுகள் மற்றும் தடயங்களை வைத்துப் பார்க்கும்போது இத்தலம் கி.பி 3-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஒரு தரப்பு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சைவ சமயத்தில் இத்தலம் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாக எழுதப்பட்டுள்ளது. நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு கோபுரமாக நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடையது இந்த ஆலயம். இவ்வாலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில் நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களைக் காணமுடியும். மேலும் இங்கு மூலவர் சிலை இருக்கும், இடம் கனகசபை என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சபை, முதலாம் பராந்தகன் சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டது. அதனால் இந்தச் சபை பொன்னம்பலம் என அழைக்கப்படுகிறது; வடமொழியில் கனகசபை எனக் கூறப்படுகிறது.

சிதம்பர ஆலயத்தில் மட்டுமே சிவனை மூன்று உருவமாக வணங்குகின்றனர். விக்ரக வழிபாடு நடராஜனுக்கும் லிங்க வழிபாடு சந்திரமௌலிஸ்வரருக்கும் ஆகாய வழிபாடு ஆகாயத்திற்கும் செய்கின்றனர். இந்த ஆகாய வழிபாடு சிதம்பர இரகசியங்களில் ஒன்றாகவும் சொல்லப்படுகின்றது. ஆலயத்தின் சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில், அங்குள்ள திரை அகற்றபட்டுத் தீபாராதனை காட்டப்படும். அங்குத் திருவுருவம் இல்லாது, தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டிருக்கும். இதன் ரகசியம் இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும், முடிவும் கிடையாது, அதை உணரத்தான் முடியும் என்பதை உணர்த்துவதேயாகும்.

சிதம்பர ஆலயத்தில் அறிவியல், பொறியியல், கணிதவியல் போன்ற மறுபக்க இரகசியமும் உள்ளதை ஆய்வாளர்கள் நிருப்பித்துள்ளனர். தமிழன் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவியல் இரகசியங்களைச் சிதம்பர ஆலயத்தில் திணித்துள்ளான் என்பதைப் பார்க்கும் போது நம்மை ஒரு கணம் வியப்பில் ஆழ்த்துகின்றது. 

  •   புவியியல்

-     சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் பூமியின் பூமத்தியரேகையின் சரியான மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதனை ஆங்கிலத்தில் Centre Point of World’s Magnetic Equator என்று அழைக்கின்றனர். இந்துக்களின் சாஸ்திரங்களின் இவ்வுலகம் நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்றப் பஞ்சப் பூதங்களால் ஆனது. நிலத்துக்கு ஆதாரமாக நீரும், நீருக்கு ஆதாரமாக நெருப்பும், நெருப்புக்கு ஆதாரமாகக் காற்றும் காற்றுக்கு ஆதாரமாக ஆகாயமும் அமைந்துள்ளன. பஞ்ச பூதங்களைக் குறிக்கும் ஆலயங்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றைக் குறிக்கும் கால அஸ்தி ஆலயம், மற்றும் நிலத்தைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் ஆகிய மூன்றும் புவியியல் நிலையில் ஒரே நேர்க் கோட்டில் அதாவது 79 degree 49 min கிழக்குத் தீர்க்கரேகையில் அமைந்துள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முன் எந்தவொரு மின்சார கருவிகளும் செயற்கை கோள்களும் இல்லாதக் காலக்கட்டத்தில் தமிழர்கள் எவ்வாறு துளியமாக இந்த மூன்று தலங்களையும் ஒரே நேர் கோட்டில் கட்டியிருப்பார்கள்? சிந்தியுங்கள்…


படம் 2 : ஒரே நேர் கோட்டில் அமைந்திருக்கும் ஆலயங்கள்

    அதுமட்டுமல்லாமல் சிதம்பர நடராஜர் ஆலயம் காந்த சக்தியின் மையப் பகுதியாகவும் திகழ்கின்றது. மேலும் சிதம்பர கோவிலின் மேல் பறக்கும் செயற்கைகோள்கள் செயல் இழந்து விடுகின்றன என்றும் கூறப்படுகின்றது. ஆலயத்தின் கோபுரங்களில் உள்ள கலசங்கள் ஒரு விதமான சக்தியை வெளியேற்றுகின்றன. இந்தச் சக்திகள் தான் செயற்கை கோளைச் செயலிழக்கக் காரணமாக இருக்கின்றது. Magnetic lines இந்த உலகில் சுழிய்ம் என்ற நிலநேர்க்கோட்டில் இருக்கின்ற ஒரே இடம் சிதம்பரம் ஆகும். ஆலயம் வீற்றிருக்கும் இடம் காந்த கதிர் வீச்சுகளின் மையமாக விளங்குகின்றது. கோஸ்மஸ் எனப்படும் பிராணத் துகள்களால் இவ்வுலகம் இயங்குகின்றது. உலகம் சுழலுவதற்கான சக்தியை கோஸ்மிக் ரேய்ஸ் கொடுக்கின்றது. கோஸ்மிக் ரேய்ஸ் வந்து செல்லும் பகுதியாக சிதம்பரம் அமைந்துள்ளது.


படம் 3: கோஸ்மிக் ரேய்ஸ் வந்து செல்லும் வழியை நடராஜரின் சிலையின் மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

  •  *  உலகம் எவ்வாறு தோன்றியது.

-      நடராஜர் சிலை சமயத்தின் குறியீடாக மட்டுமல்லாமல் அறிவியல் வெளிப்பாடாகவும் திகழ்கின்றது. அகிலம் எவ்வாறு உருவானது என்பதை துள்ளியமாகக் கூறும் ஒரு குறியீடாக உள்ளது. இந்த 21-ஆம் நூற்றாண்டின் மெய் சிலிர்க்க வைக்கும் விஞ்ஞான துறைக்குச் சவால் விடும் அளவிற்கு தனக்குள் பல அறிவியல் நுணுக்கங்களை இச்சிலை அடக்கி வைத்துள்ளது. 1972-இல் Fritjof Capra என்ற விஞ்ஞானி எழுதிய Tao Of Physics என்ற நூலில் the cosmic dance of Shiva வை பற்றி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன.

-      உலகத்தில் மிகச் சிறந்த அணு ஆராய்ச்சி நிறுவனமான European Organization for Nuclear Research ( CERN ) சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா என்ற இடத்தில் 27 கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அனைத்து ஆராய்ச்சிகளும் செய்யப்படும் தலமாக ( CERN ) திகழ்கின்றது. இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் நுழைவாயிலில் 2 மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசால் கடந்த 2004-ஆம் ஆண்டு) சுவிட்சர்லாந்து நாட்டிற்கு 2 நடராஜர் சிலைகள் பரிசளிக்கப்பட்டுள்ளது. ஒன்று நுழைவாயிலிலும் மற்றொன்று ஆராய்ச்சி கூடத்திலும் வைக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம்?

படம் 4 :  ( CERN ) ஆராய்ச்சி மையத்தின் நுழைவாயில்

அந்தச் சிலைக்கு கீழ் பகுதியில் காலத்தால் சொல்ல இயலாத பல கேள்விகளுக்கு பதில்களை இச்சிலை அடக்கியுள்ளது என்று எழுதப்பட்டுள்ளது.

               அதுமட்டுமல்லாமல் இந்தச் சிலையின் அமைப்பு அகிலத்தின் அமைப்பை வெளிபடுத்துகின்றது.

படம் 5 : நடராஜர் சிலை அமைப்பு

நடராஜரைச் சுற்றி இருக்கும் வளைவு இந்த அகிலத்தையும் அதில் பதிக்கப்பட்டுள்ள நெருப்பு இந்த உலகம் விரிவடைந்து கொண்டே இருக்கும் என்பதை காட்டுகிறது. இதற்கு இடையில் அமைந்துள்ள நடராஜர் சிலையின் வடிவம் வலது கையிலிருந்து இடது கால் வரை பால் வழிகளின் வடிவத்தை இவரின் தலையிலிருந்து கால் வரை கோஸ்மிக் ரேய்ஸ் பால் வழிகளைக் கடந்து போகும் திசையையும் வெளிக்காட்டுகின்றது. நடராஜரின் இதயம் அமைந்துள்ள இடம் தான் நாம் வாழும் சூரியக் குடும்பமும் அமைந்துள்ளது. நடராஜரின் இடுப்பைச் சுற்றி நகரும் பாம்பு காலம் என்றும் நிற்காமல் ஓடும் என்பதைக் காட்டுகின்றது. இந்தப் பிரபஞ்சத்தின் அமைப்பையே மேற்கத்திய விஞ்ஞானிகள் Big Bang Theory என்ற ஆய்வு கட்டுரையின் மூலம் கூறுகின்றனர்.

  • மனிதனின் உடல் அமைப்பு.

-      மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் (கோசங்கள் என்னும் Layers) கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன.

-              சிதம்பரம் நடராஜர் கோவிலில் 9 நுழைவாயில்கள் உள்ளன. அதுபோல் மனித உடலில் 9 துளைகள் உள்ளன. நடராஜரின் சன்னதி மனிதனின் இதயத்தை வெளிப்படுகின்றது. உடலில் இடப் பக்கம் இதயம் அமைந்துள்ளது போல் கோவிலின் கருவறையின் இடது புறத்தில் நடராஜர் சிலை அமைந்துள்ளது. கருவறைக்கு மேல் முதலாம் பராந்தகன் சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டுள்ளது. இக்கூரையில் 21600 தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. 21600 தங்க ஓடுகள் சராசரி ஒரு மனிதன் ஒரு நாளில் சுவாசிக்கும் எண்ணிக்கையைக் காட்டுகின்றது. ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன் 15 முறை சுவாசிக்கின்றான். அப்படியென்றால் ஒரு மணி நேரத்தில் 900 முறையும் 24 மணி நேரத்தில் 21600 முறையும் சுவாசிக்கின்றான் மனிதன். அந்தத் தங்க ஓடுகளைப் பதிக்க 65000 ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 65000 ஆணிகள் மனித உடலில் இருக்கும் நாடிகளின் எண்ணிக்கையைக் குறிக்கின்றன.

-       மனித உடல் வடிவத்தில் ஏன் இவ்வாலயம் கட்டப்பட்டுள்ளது? அனைத்தின் ஆதி காரணம் ஆகாயம் ஆகும். மனித உடலிலும் ஆகாயம் உள்ளது. இதனையே அம்பரம் என்று சமஸ்கிருதத்தில் சொல்லப்படுகின்றது. இதய ஆகாயம் என்று சொல்கின்றனர். அங்கு தான் மூச்சாய் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். கோபத்தின் போது மூச்சுக் காற்று வேகமாக வெளியேறும். அப்பொழுது நடராஜர் ருத்ர தாண்டவம் ஆடுவார் என்றும் சொல்வர். அண்டத்தில் இருப்பது தான் பிண்டத்தில் இருக்கும் என்பதே சிதம்பர இரகசியம்.

 படம் 6 : நடராஜர் சிலையில் உள்ள அர்த்தங்கள்

ஆடல் கடவுள் என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார். வலது புற மேல் கையில் உடுக்கையைக் கொண்டிருப்பது இந்த உலகம் ஒலியின் மூலம் துவங்கியது என்பதைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. இன்றைய அறிவியல் அறிஞர்கள் இதைத் தான் பெரு வெடிப்புக் கொள்கை (BIG BANG THEORY) என்று அழைக்கின்றனர். இடது புற மேல் கையில் உள்ள நெருப்பு எந்நேரமும் அழித்து விடுவேன் என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது.வலது புற கீழ் கையில் காப்பாற்றுவதைக் குறிப்பதைப் போன்று, பயப்படாதே நான் இருக்கிறேன் என்று கூறுகின்றது. இடது புற கீழ் கையால், உயர்த்தி இருக்கும் காலைக் காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுவோருக்கும், தன்னை வணங்கும் பக்தர்களுக்கான இடம் என்பதை உணர்த்துகிறது. இந்த நடனத்தில் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துப்போகின்றது.

           அதுமட்டுமல்லாமல், நடராஜர் சிலையில் மற்றொரு அம்சமும் அடங்கியுள்ளது. ஒரு காதில் கடுக்கன் அணியப்பட்டும் மற்றொரு காதில் கம்மல் இருக்கும். சிவப்பெருமனை நாம் அர்த்தநாரீஸ்வரர் என்று அழைப்போம். ஆண் பாதி பெண் பாதி என்பதே அதற்குப் பொருள் . ஒரு பக்கம் ஆண்கள் அணியும் கடுக்கண் மறுபக்கம் பெண்கள் அணியும் கம்மல் நடராஜர் சிலையில் புலப்படுகின்றது. நடராஜரைச் சுற்றி ஓர் ஆடை பரந்து இருப்பது போல் இருக்கும். அந்த ஆடை பெண்ணைக் குறிக்கின்றது.  ஒரு பகுதியான மார்பு பகுதியையும் ஒரு கை மறைப்பது போல் இருக்கும். இதன் மூலம் தமிழன் நாகரீகத்தின் உச்சத்தைத் தொட்டவன் என்பது புலப்படுகின்றது.

         இதுவரை நீங்கள் படித்தவை யாவும் சிதம்பர நடராஜர் ஆலயத்தின் சில இரகசியங்களே ஆகும். இன்னும் அவிழ்க்கப்படாத பல உண்மைகள் இந்த ஆலயத்தில் இருக்கின்றன. சிதம்பர நடராஜர் ஆலயம் சிவ தலம் மட்டுமல்ல அது பழமை வாய்ந்த விண்வெளி ஆராய்ச்சி கூடமாக இருந்து அகிலத்தின் தோற்றத்தைக் கூறி உலகத்திற்கும் தனிப்பட்ட மனித உடலுக்கும் உள்ள ஒற்றுமையை விளக்கி அறிவியலின் எல்லை ஆன்மிகம் என்பதை நிருப்பித்துள்ளது.


 

13 comments:

நூறாவது அகவையில் தடம் பதிக்கின்றார் மலேசியாவைச் செதுக்கிய சிற்பி

படம் 1: பிறந்த நாள் வாழ்த்து      2025-ஆம் ஆண்டு 10-ஆம் தேதி மலேசிய அரசியல் வரலாற்றில் 100 வயதை எட்டிய முதல் அரசியல் தலைவர் என்ற பெருமையை நா...