Wednesday, 16 September 2020

இந்தியாவின் அரசியலமைப்பின் தந்தைஅம்பேத்கரின் சாகாவரிகள்

இந்தியாவின் அரசியலமைப்பின் தந்தைஅம்பேத்கரின் சாகாவரிகள்


  • மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்திச் செய்தால்தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்தப் பெயர் உனக்கு வேண்டாம்
  • வெற்றியோ தோல்வியா எதுவரினும் கடமையைச் செய்வோம்
  • யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்
  • தன்னை உயர்ந்தவனாகவும் மற்றோரைத் தாழ்ந்தவனாகவும் நினைப்பவன் ஒரு மனநோயாளி
  • எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிசத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்
  • அறிவு, நன்னடத்தை, சுய மரியாதை இவையே நான் வணங்கும் தெய்வங்கள். இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை
  • வறுமை என்பது உடன் பிறந்தது. தவிர்க்க முடியாதது. தீர்க்க முடியாதது என்றெண்ணுவது உங்களின் மடமை
  • அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழித்தோண்டிப் புதையுங்கள்.
  • ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்
  • எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறானோ, யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ, அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுயமரியாதையும் பெற்று இருக்கிறானோ, அவனே சுதந்திரமான மனிதன்
  • உலகில் யாரும் தெய்வீகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொறுத்து. முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது
  • மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டால் யாரும் உயர்ந்த நிலையை அடைய இயலும்
  • ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதைவிட அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சாலச் சிறந்தது. 
  • அறிவைத் தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலைத் தேடி ஓடிவரும்.

3 comments:

நூறாவது அகவையில் தடம் பதிக்கின்றார் மலேசியாவைச் செதுக்கிய சிற்பி

படம் 1: பிறந்த நாள் வாழ்த்து      2025-ஆம் ஆண்டு 10-ஆம் தேதி மலேசிய அரசியல் வரலாற்றில் 100 வயதை எட்டிய முதல் அரசியல் தலைவர் என்ற பெருமையை நா...